அவுஸ்திரேலியாவில் இருந்து 26 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்!

அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு 26 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டனர்.

விசேட விமானம் ஒன்றில் அவர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் படகு மூலம் இந்த வார ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்களாவர்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசித்தமைக்கான உரிய வீசா அல்லது சட்ட முறைகளை கடைப்பிடிக்காமை காரணமாக குறித்த 26 பேரும் திருப்பியனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அவுஸ்திரேலியாவில் இருந்து 116 இலங்கையர்கள் சுயமாக அல்லது பலாத்காரமாக திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்றும் போவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.