அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மஹிந்த ராஜபக்‌ஷ


நாட்டில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு  மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் பாராளுமன்றத்தில் அழைப்பு விடுத்தார்
2013 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை உரை நிகழ்த்தினார்.
இதன்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த அவர், சர்வதேச சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.