Search

யாழ் குடாநாட்டின் பல இடங்களில் மாவீரர் தின சுவரொட்டிகள்!

தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சி வாரம் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் அனுஸ்டிக்கப்பட்டு வரும்நிலையில், யாழ் குடாநாட்டின் பல இடங்களிலும் மாவீரர் தினத்தையொட்டிய பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன.

தமிழீழ மாவீரர் நாள்” என்ற தலைப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளில் மாவீரர்கள் புரிந்த தியாகங்களின் முக்கியத்துவம், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் பரிமாணங்கள், தேசியத் தலைவரின் புகைப்படம் போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளன. எந்தத் தடைகள் வந்தாலும் உங்கள் வழியில் சென்று நாம் தமிழீழத்தை வென்றெடுப்போம் என்ற வீர முழக்கமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டின் வடமராட்சியிலுள்ள உள்ளக வீதிகள் சிலவற்றில் நேற்று இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதேபோல் கோண்டாவில், கொக்குவில் மற்றும் பண்டத்தரிப்பு போன்ற இடங்களிலும் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதை அறிந்த சிறிலங்கா படையினரும் பொலிஸாரும் உடனடியாக சம்பவ இடங்களுக்குச் சென்று அந்தச் சுவரொட்டிகளை அகற்றினர். அந்த இடங்களில் நின்ற இளைஞர்களும் படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் யாழ் குடாநாட்டில் எங்குமில்லாதவாறு களை கட்டுகின்ற மாவீரர் தின நிகழ்வுகழ் தற்போது மீண்டும் தளிர்விடத் தொடங்குவதையே யாழ் குடாநாட்டில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *