வல்வை செய்திகள்

வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி யாழில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.11.10.2015

2015 ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றிக் கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட விளையாட்டுக்கழகங்களுகிடையிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று வல்வை விளையாட்டுக் கழகம் வெற்றி யாழில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது யாழ் மாவட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு இடையே மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக மூன்றாவது ஆண்டாக இம்முறையும் இடம்பெறவுள்ளது. யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினால் நடத்தப்படும் 11 கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் திக்கம் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து வல்வை விட்டுக்கழகம் மேதியது முதலில் வல்வை விளையாட்டுக்கழகம் ஒரு கோலினை போட்டு விறுவிறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த வேளை திக்கம் விளையாட்டுக்கழகம் ஒரு கோலினை போட இரு அணிகளும் சமபலத்துடன் மோதி இறுதியில் தண்டா உதை மூலம் வெற்றி பெற்று வல்வை விளையாட்டுக்கழகம் யாழில் மைலோ வெற்றிக் கிண்ணத்திற்காக நடைபெறும் போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றுள்ளது-

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *