இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளை பார்வையிட பூரண அனுமதி வழங்கப்பட வேண்டும் – TNA

இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளை பார்வையிட பூரண அனுமதி வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த யுவதிகளை பார்வையிடுவதற்கு பூரண அனுமதி வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
13 யுவதிகள் இராணுவத்திலிருந்து விலக விரும்பிய போதிலும் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமிழ் யுவதிகளை பலவந்தமாக படையில் இணைத்துக்கொள்ளவில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக இவ்வாறு தமிழ் யுவதிகள் படையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் ஆண்களையும் இவ்வாறு படையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.