Search

வல்வை கிரிகெட் அணி அரையிறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது.

வல்வை கிரிகெட் அணி அரையிறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. புற்றளை வினஷ் விளையாட்டுகழகத்தினால் நடாத்திவரும் 10 ஓவர் கொண்ட மென்பந்தாட்ட தொடரின் கால் இறுதியாட்டம் நேற்று (புதன்கிழமை ) உபயகதிர்காமம் விளையாட்டுகழக மைதானத்தில் நடைபெற்றது.

இந்த  கால் இறுதியாட்டத்தில் வல்வெட்டித்துறை வல்வை விளையாட்டுகழகத்தை எதிர்த்து கரவெட்டி ஞானம்ஸ் விளையாட்டுகழகம் மோதியது. முதலில் ஆட்டத்தை தொடர்ந்த வல்வை விளையாட்டுகழகம்10 ஓவர் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை எடுத்தது. வல்வை அணி சார்பாக ஜெகன் 36 ஓட்டம் , ரஞ்சித் 27 ஓட்டம், நிரோஜன் 13 ஓட்டம், பிரகலாதன் 10 ஓட்டங்களையும் பெற்றுகொடுத்தனர்.

89 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களம் புகுந்த ஞானம்ஸ் விளையாட்டுகழகம் அனைத்து  விக்கெட்டுக்களையும் இழந்து 65 ஓட்டங்களை எடுத்தது. இதனால் வல்வை விளையாட்டுகழகம் 23 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. பந்துவீச்சில் மதன் 03 விக்கெட், சுதாகரன் 02 விக்கெட், ஜெகன், றோசான், ரஞ்சித் ஆகியோர் தலா 01 விக்கெட்டுக்களை எடுத்தனர்.

அரை இறுதியாட்டத்தில் வல்வை விளையாட்டுகழகம் நெல்லியடி ஸ்ரீமுருகன் விளையாட்டுகழகத்துடன் மோதவுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *