யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் ஆர்.இராசகுமாரனிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்றுமுன்தினம் தன்னை விசாரணைக்கு வருமாறு புலனாய்வு பிரிவினர் தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்ததாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கலைப்பீட பீடாதிபதி வி.பி.சிவநாதன் மற்றும் முகாமைத்துவப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் சிவராஜா ஆகியோருடன் வவுனியா சென்றதாக குறிப்பிட்டார்.
மூன்றரை மணிநேரம் இடம்பெற்ற விசாரணையின்போது நவம்பர் 26, 27, 28ம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவே திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டதாக புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ததாக இராசகுமாரன் தெரிவித்தார்.