வன்னியில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக்குளம், கிளிநொச்சி குளம், கனகாம்பிகைகுளம், புதுமுறிப்புக்குளம், அக்கராயன்குளம் உட்பட முக்கிய குளங்கள் வான் பாய்ந்து வருகின்றன.
பல வீதிகளில் திருத்தப்படாத சீரற்ற பாலங்கள் ஏராளம் காணப்படுவதால் பாதுகாப்பற்ற போக்குவரத்து இடம்பெறுவதுடன், பல பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அல்லது தடைசெய்யப்பட்ட சூழல் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக ஏனைய பகுதிளுடன் தொடர்பு ,போக்குவரத்து,துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தொடரும் மழையால் பெரும்பாதிப்புக்களுக்கு மக்கள் உள்ளாகக்கூடிய சூழல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இம்மக்கள் அடிப்படை வசதிகளை இழந்து அவல வாழ்வை எதிர்கொண்டிருப்பதாகவும் அறியப்படுகின்றது.