Search

பனிப்பாறையில் சிக்கி தவித்த திமிங்கலங்களை மீட்ட கிராம மக்கள் (வீடியோ)

கனடாவில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறைகளுக்கு இடையே சிக்கி கொண்டு தவித்த திமிங்கலங்களை மக்கள் மீட்டுள்ளனர்.

மிகப்பெரிய விலங்கினமாக திமிங்கலங்கள் அட்லாண்டிக் கடலில் கூட்டமாக காணப்படுகின்றன.

இந்நிலையில் கனடா நாட்டின் இனுக்ஜுவாக் என்ற கிராமத்திற்கு அருகே, பனி பாறைகளுக்கிடையே காணப்பட்ட துளையில் 10க்கும் அதிகமான திமிங்கலங்கள் சிக்கி கொண்டன.

இந்த திமிங்கலங்கள் படும் அவஸ்தையை கண்டு, கிராம மக்கள் நகர மேயரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மேயர் “இது முடியாத காரியம்” என கூறிவிடவே, கிராம மக்கள் இணைந்து சில யுக்திகளை மேற்கொண்டு பனி பாறைகளை உடைத்து திமிலங்களை விடுவிக்க உதவினர்.

தற்போது இந்த திமிங்கலங்கள் பனிபாறை துளைகளிலிருந்து விடுவித்து கொண்டு சென்று விட்டன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *