பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – கனடா

பொதுநலவாய நாடுகள் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கனடா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, ஜனநாயகம் உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கை பூரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டுமென கனேடிய வெளிவிகார அமைச்சின் பேச்சாளா அமான்டா ரெய்ட் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் பின்பற்றப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், ஜனநாயக பெறுமதிகள், அரசியல் நல்லிணக்கம் போன்றன தொடர்பில் இலங்கை கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட யோசனைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென ரெய்ட் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.