கருத்துவெளியிடும் உரிமை அனைவருக்கும் உள்ளது – இலங்கையை வலியுறுத்துகிறது அமெரிக்கா!

சிவில் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து அமெரிக்க தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. இது குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை, அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்திய சிவில் சமூக நிறுவனங்கள், ஆர்வலர்கள், மற்றும் சட்டத்திற்காக குரல் கொடுப்போருக்கு எதிராக தொடர்ந்தும் நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் கரிசனை கொண்டுள்ளது.  கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான உரிமையானது பிரபஞ்சத்திற்கு உரித்துடையதென்பதுடன் அது இலங்கை சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாத்து அனைத்து பிரஜைகளும் பழிவாங்குதலுக்கு உட்படும் அச்சமேதுமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உள்ள உரிமையை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை நாம் கோருகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published.