தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (26.09.2016, திங்கடகிழமை) நல்லூரில் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
நல்லூரில் தியாக தீபம் திலீபன் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த மேடை அமையப் பெற்ற (தமிழினத் துரோகிகளால் அடித்து நிர்மூலமாக்கப்பட்ட திலீபனின் நினைவுக்கல் இருந்த) அதே இடத்தில் இன்று காலை சரியாக 9.30 க்கு அகவணக்கம் செலுத்தப்பட்டதனை அடுத்து, நல்லூரின் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியில்அஞ்சலி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.