மரண அறிவித்தல்-அருணாச்சலம் கண்ணப்பசாமி
மலர்வு : 17 ஏப்ரல் 1925 — உதிர்வு : 22 சனவரி 2013 |
பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும், தற்போது டொரோண்டோ கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அருணாச்சலம் கண்ணப்பசாமி அவர்கள் 22-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாச்சலம் – செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற இளையபெருமாள் – சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பாக்கியம், சந்திரசேகரம், பழனிமலை மற்றும் ஆனந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயகாந்தன்(கனடா), ஜெயஸ்ரீ(கனடா), ஜெயமுகுந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயசிகாமணி(கனடா), ராஜினி(கனடா), கார்த்திகா(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமாவும்,
யுவேன், றிச்சி, சச்சின்(கனடா), ஜெயதீபா, அஜந்(கனடா), ஆதித்தியன், அனந்திகன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||
|