எதிர்காலத்தில் காட்டுவாசிகளின் மொழியிலும் தேசிய கீதம் பாட நேரிடும்: மேதானந்த தேரர்

இலங்கையில் எதிர்காலத்தில் காட்டுவாசிகளின் மொழியிலும் தேசிய கீதம் பாட நேரிடம் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நினைத்த மாதிரி தேசிய கீதத்தில் புதிய மொழிகளை இணைக்கக் கூடாது. தேசிய கீதத்தில் தமிழ் மொழியை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும் ஒரே மொழியில் தேசிய கீதம் பாடப்படுகின்றது.எந்தவொரு நாட்டிலும் தேசிய கீதம் பிரதான மொழியில் பாடப்படுவது வழமையாகும்.

பல இன மக்கள் வாழ்கின்றார்கள் என்பதற்காக தேசிய கீதத்தை பல மொழிகளில் பாடினால் அது குழப்பமாகிவிடும். தமிழ் மக்கள் இவ்வாறு கோரிக்கை விடுக்கவில்லை.

இவ்வாறு தமிழ் மொழியில் தேசிய கீதத்தில் இணைக்கப்பட்டால், எதிர்காலத்தில் காட்டு மொழிகளையும் இணைக்க நேரிடும்.

வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில், சிங்கள மொழி இணைக்கப்பட வேண்டும் என எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.