வல்வை வி.க உதைபந்தாட்ட போட்டியில் 13.03.2017 கருணகரன் வி.க மற்றும் சிவனந்தா வி.க வெற்றி
பருத்தித்துறை உதைப்பந்தாட்ட லீக் அனுமதியுடன்இ லீக்கில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையில் வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் ஏழு நபர் கொண்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இன்று றெயின்போ வி.க மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகிய உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில்
இன்று நடைபெற்ற முதலாவது சுற்றில் கருணகரன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் மோத இருந்தது. ஆதிசக்தி விளையாட்டுக்கழகம் பங்கு பற்றமையினால் கருணகரன் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் கரவை செஞ்சுடர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து சிவனந்தா
விளையாட்டுக்கழகம் மோதியது. இந்த ஆட்டத்தில் 6:0 என்ற கோல் கணக்கில் சிவனந்தா விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது அடுத்த ஆட்ட புதன் கிழமை இடம்பெரும்