
இலங்கைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள தரப்பொன்று புலம்பெயர் புலிகளின் உதவியுடன் செயற்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை 8 நாடுகள் விடுதலைப்புலிகளுக்கு வேறு வழிகளில் ஆயுதங்களை வழங்கியிருந்தமை குறித்து தகவல்களையும் அரசாங்கம் கண்டறிந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.