
காலநிலை சீரான முறையில் அமைந்திருக்காத நிலையில் கூட இப் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் இனவழிப்பை எடுத்துரைக்கும் வகையில் கண்காட்சி மற்றும் காணொளி ஊடாகவும் கவனயீர்ப்பை நடாத்தியதோடு மற்றும் பிரான்ஸ் மொழியில் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட தளபதி கேணல் பரிதி அண்ணாவின் விடையம் கண்காட்சியில் சுட்டிக் காட்டப்பட்டதை பிரான்ஸ் மக்கள் பார்வையிட்டு தமது நாட்டு அரசாங்கம் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.
5 நாளாக இன்று 16.02.2013 பிரான்சில் தமிழ் வான் தொடர்ந்து பின்வரும் இரு இடங்களில் Parvis de Droite de L’Homme et Place de Saint Michel தனது கண்காட்சியை தொடர இருக்கிறது.
அதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழ் வான் ஹோல்லாந்து நாட்டை நோக்கி பயணிக்க இருக்கிறது.
இலங்கைத் தீவில் இனிமேலும் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் நிற்கதியாய் நிற்கும் தமிழ் இனத்திற்கு சர்வதேச சமூகம் நீதியான தீர்வு ஒன்றினைப் பெற்றுத்தர வேண்டும் என்று ஐநாவிடம் அறைகூவல் விடுப்பதற்காக உலகத் தமிழினம் ஒன்று கூடுகின்ற ஐநா முன்றலுக்கு தமிழ் வான் இறுதி நாளான 4.3.2013 அன்று சென்றடைய உள்ளது.
மனிதவுரிமை அமர்வுகள் தொடங்க இருக்கும் நாளான அன்றில் இருந்து ஐநா சபையின் முன்றலில் பிரான்ஸ் நாட்டில் இருந்து சென்று தமிழ் இன அழிப்பு கண்காட்சியை செய்வதுக்கு திரு கஜன் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றார்.
தமிழ் வான் நடமாடும் கண்காட்சி பயணம் ஐநா முன்றலில் 4.3.2013 அன்று முற்றுப்பெறுகிறது. அன்றைய நாள் உலகத்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு இன்னும் சுதந்திர தாகம் தீரவில்லை என்பதை மீண்டும் ஒரு தடவை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லவும் பெருந்திரளான தமிழர்கள் ஒன்றுகூட உள்ளனர்.
பிரான்ஸிலிருந்து புகையிரதத்திலும், யேர்மனியிலிருந்து பேரூந்துகளிலும், பிரித்தானியாவிலிருந்து விமானங்கள் மற்றும் பேரூந்துகளிலும், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, நோர்வே மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பேரூந்துகளிலும் விமானங்களிலும் பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியூடன் திரண்டுவர இருக்கின்றனர்.
தமிழின விடுதலைப்போருக்கும் தாயக செயற்ப்பாடுகளுக்கும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் உணர்வுடன் வழங்கிய பேராதரவை வரலாறு என்றுமே மறந்து போகாது. இந் நிலையில் ஐநா சபைமுன்றலிற்கு சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் திரண்டு வருகைதர வேண்டும் என்று அன்புரிமையோடு தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் திரு சசிவந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார் .
தொடர்புகளுக்கு info@tamilvan.com