புனர்வாழ்வு முகாமில் தமிழினி

புனர்வாழ்வு முகாமில் தமிழினி

வவுனியா நலன்புரி முகாமில் அண்மையில் இடம்பெற்ற போராளிகளின் திருமண நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த ‘தமிழினி’ மணமகளுக்கு தோழியாக கலந்து கொண்டிருந்தபோது இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டது.

சுப்பிரமணியம் சிவகாமி என்னும் சொந்த பெயர் கொண்ட தமிழினி  கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்தவர்.

1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைந்துகொண்டார்.

27.05.2009 அன்று வவுனியா நலன்புரி முகாமில் கைது செய்யப்பட்ட தமிழினி கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு கடுமையான விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமய வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

26.06.2012 அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு புனர்வாழ்வு பெற்று வருகிறார். ஒருவருட காலத்திற்கான புனர்வாழ்வுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.