தங்காலை சிறையில் வைத்து தமிழ் கைதியான சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்பவர் குடிபோதையில் இருந்தவர்களால் தாக்கப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த கைதி தற்போது கொழும்பு மெகசின் சிறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ஆணைக்குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்ததாக கொழும்பு மகசின் சிலையில் அடைக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு வெல்லாவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் வழக்கு விசாரணைக்காக அம்பாந்தோட்டைக்கு அழைத்துச் சென்றபோதே தங்காலை சிறையில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.