இளங்கதிர் விளையாட்டுக்கழகமானது அ.சி .விஷ்ணுசுந்தரம் ஞாபகார்த்தமாக Tube tamil அனுசரணையுடன் வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையே 9நபர் கொண்ட ஒருநாள் உதைபந்தாட்டதொடரை நடாத்தி வருகின்றது… அந்த வகையில் 25.06.2017 இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் றெயின்போ அணியினை எதிர்த்து சைனிங்ஸ் அணியானது மோதியது.. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் சைனிங்ஸ் அணியானது 4:2 என்ற கோல்கணக்கில் வெற்றியீட்டி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது..
ஆட்டத்தை முழு நேர கட்டுப்பாட்டில் வைத்திருந்த சைனிங்ஸ் அணிக்கு முற்பாதியில் சுரேன் 2 கோல்களையும் பிற்பாதியில் குமரன், துளசிராம் தலா 1 கோல்களையும் போட்டனர். அபாரமான ஆட்டம் மூலம் இறுதிப்போட்டியில் சைனிங்ஸ் அணி எதிர் இளங்கதிர் அணி
