பருத்தித்துறை கோட்ட பிரிவில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கிடையிலான தளகளப் போட்டிகள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகின்றது. இந்த போட்டிகளில் வல்வெட்டித்துறை நகரசபைக்கு உட்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களும் பங்குபற்றின.
இந்த போட்டிகளில் தெரிவாகும் மாணவர்கள் வலய மட்ட போட்டிகளில் விளையாடுவதற்கான தகுதிகளை பெறுவார்கள். இப்போட்டிகள் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.