
பான் கீ மூனின் ஊடகப் பிரதிநிதி, நேற்றைய தினம் இதனை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களை இலங்கை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எஞ்சிய சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்குவதற்கு அரசாங்கம் கூடுதல் முனைப்புடன் செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.