பிரித்தானிய வல்வை நலன் புரிச்சங்கத்தின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளின் அடிப்படையில்.
பிரித்தானிய வல்வை நலன்புரி சங்கத்தினரால் மீண்டும் யாழ்ப்பாணத்தில் மாவீரர் தூபி.
—————————–
சிங்கள அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு எம் தாயகப்பகுதி எங்கும் அமைந்திருந்த அனைத்து மாவீரர் நினைவுச்சின்னங்களும் அழித்தொழிக்கப்பட்ட நிலையில்.
நமக்காகவும் நம் மண் விடுதலைக்காகவும் உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கும் ஒரு நினைவுத் தூபியினை மீண்டும் அமைப்பதற்கான ஒரு பணியினை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் பிரித்தானியா வல்வை நலன்புரிச் சங்கம் இணைந்து செயற்பட்டது.
அதன் பலனாக இன்று பல சிரமங்களுக்கு மத்தியில் யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடப்பகுதியில் முன்னதாக மாவீரர் தூபி இருந்த இடத்தில் பிரித்தானியா வாழ் வல்வை மக்களின் சார்பில் பிரித்தானியா வல்வை நலன் புரிச்சங்கத்தினரால் ரூபா 250000.00 செலவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் ஒத்துழைப்புடன் எம் மாவீர்ர்களுக்கான நினைவுத் தூபி இன்று கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் முன்னர் இருந்த மாவீரர் நினைவிடம் சில வருடங்களுக்கு முன்னர் மகிந்த அரசினால் திட்டமிடப்பட்டு சில சிங்கள மாணவர்களை கொண்டு அழித்தொழிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்றும் அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் காரணமாக இதனை கட்டிமுடிப்பதற்கு சிறு காலதாமதமும். மாணவர்கள் சிலர் அரசியல் நெருக்கடிகளுக்கும் ஆளானார்கள். இதனை செய்து முடிப்பதில் உறுதுணையாக இருந்த மாணவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த உதவிச் செயற்பாட்டுக்கான ஒரு பகுதி பணத்தினை சில வல்வை மக்கள் தந்துதவியது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வருடம் மேலும் இவ்வாறான பல செயற்பாடுகளை தொடர்ந்த செய்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளோம் என்பதனையும் இங்கு குறிப்பிடவிரும்புகின்றோம்.
ஒவ்வொரு செயற்பாடுகளும் பூர்த்தியான பின்னர் விபரங்கள் உங்களுக்கு அறியத்தரப்படும்.
மேலும் இவ்வாறான செயற்பாடுகளில் வல்வை மக்களாகிய நீங்களும் பங்கெடுக்க விரும்பினால் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
நன்றி.
வல்வை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா