Search

சாம்சுங் நிறுவனத்தால் ஆப்பிள் ஆடிப்போயுள்ளது !

சமீபத்தில் சாம்சுங் நிறுவனம் வெளியிட்ட கலக்ஸி மோபைல் போனில், ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுற்பம் பாவிக்கப்பட்டுள்ளது என்று ஆப்பிள் நிறுவனம் வழக்குதொடர்ந்தது. அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாகப் போனது. இதனையடுத்து சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலரை சாம் சுங் நிறுவனம் ஆப்பிளுக்கு தண்டப்பணமாகக் கட்டியது.

இருப்பினும் சாம் சுங் நிறுவனம் சும்மா விட்டபாடாக இல்லை. ஆப்பிள் நிறுவனம் மணிக்கூடு வடிவில் ஒரு மோபைல் போனை வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு ஆப்பு வைப்பதுபோல சாம் சுங் நிறுவனம் தாம் ஒரு மணிக்கூடு வடிவில் மோபைல் போனை வெளியிடவுள்ளது. மிகவும் இரகசியமாக சாம் சுங் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.

இருப்பினும் இந்த மணிக்கூட்டு மோபைல் போனின் உருவம் படங்கள், சீனாவில் இருந்து வெளியாகியுள்ளது. இதனைக் கேள்வியுள்ள ஆப்பிள் நிறுவனம் ஆடிப்போயுள்ளது.

காரணம் ஆப்பிள் நிறுவனம் தனது மாடலை தயாரிக்க இன்னும் 1 வரும் ஆகும். ஆனால் அதற்கு முன்னதாகவே சாம் சுங் நிறுவனம் அதனை தயாரித்துவிட்டது. கில்லாடிக்கு கில்லாடி உலகில் உள்ளார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *