இலங்கைக்கு மிகவும் நெருக்கமான இந்திய இன்று பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளது எனவும் தன்னை காட்டி இந்திய அரசாஙக்த்தை கவிழ்கக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பேய்க்கு பயந்து, மயானங்களில் வீடுகளை கட்டுவதில்லை. நாம் இவற்றை கண்டு நிலைகுலைந்து விட மாட்டோம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் பாதிப்புகள் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.