வட மாகாணசபைத் தேர்தலுக்கான முன் ஆயத்த பிரச்சாரங்களை குழப்பும் நோக்கில் அரசாங்கம் தாக்குதல்களை நடத்தி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் ஓர் கட்டமாகவே அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதலை கருத வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேசிய மற்றும் உள்ளுர் அரசியல் தலைவர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகைள அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமைதியான முறையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவினர் உரிய முறையில் செயற்பட்டு தங்களுக்கு பாதுகாப்பை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சிலரை காவல்துறையினரிடம் ஒப்படைத்த போதிலும் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.