
விமானம் மூலம் பலாலிக்கு வந்திறங்கிய இவர்கள் இன்று மாலை ரில்க்கோ விடுதியில் தங்கியுள்ளனர்.
இக்குழுவினர் சற்று முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூரத்தகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
இலங்கைக்கு நேற்றிரவு வந்துள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இன்று முற்பகல் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
பாராளுமன்ற சபை அமர்வுகளைப் பார்வையிடுவதே இந்த விஜயத்தின் நோக்கமெனவும் இன்று நண்பல் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவுடன் அவர்கள் கலந்துரையாடியதாகவும் வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ரொட்னி பெரேரா தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு வருகை தந்த இந்தக் குழுவினர் எதிர்வரும் 12ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.வந்த இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் சிவில் சமூகத்துடன் சந்திப்பு
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரும் சிவில் சமூகத்தினருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்று வருகின்றது.
இச்சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுரேஸ் பிறேமச்சந்திரன், ஈ.சரவணபவன், அரியநேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், மன்னார் ஆயர் அதி.வண இராயப்பு யோசேப் யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.