30.08.2018 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை வடமகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றய சர்வதேச தினத்தை மன்னாரில் அனுஷ்டித்தார்கள்
மன்னார் பொதுவிளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து ஊர்வலமாக வைத்தியசாலை வீதியூடாக அரச அதிபர் அலுவலகம் சென்று அரச அதிபரிடம் வடக்கு கிழக்கு மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் .திருமதி .. யோகராசா கலாரஞ்சினி அவர்களும். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க இணைப்பாளர் . திருமதி. சந்திரா அவர்களும் மகஜர் கையளித்தனர்.. தமது உறவுகளுக்கான பதில் கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்பதோடு.. சர்வதேசம் எமக்கான தீர்வைபெற்றுத்தரவேண்டும் என்றார்கள்..
. .