கண்ணீர் அஞ்சலி கலாபூசணம்,கலைச்சுடர்,கலைப்பரிதி,சிலம்புச் செல்வன் அமரர் தில்லை சிவலிங்கம்
கடற்புலிகளின் சிறப்புதளபதி
சூசை அண்ணாவின் சகோதரர் தில்லையம்பலம் தவராசா பொலிகண்டியில் 28.11 2018 அன்று
அமரத்துவம் அடைந்து விட்டார்.
கடற்புலிகளின் தொடக்க காலங்களில் அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் இவருடைய பங்களிப்பும் கணிசமாக இருந்தது என்பதை நன்றியுணர்வோடு எண்ணிப்பார்க்கின்றோம்.
ஒரு தொகுதி கடற்புலிப்போராளிகளுக்கு சிலம்பாட்டம் கற்றுத்தந்த ஆசான் இவர்.தமிழீழ எழுச்சி நாட்களில் வானில் வெளிச்சவீடு ஏற்றும் பொறிமுறையை எமது போராளிகளுக்கு கற்றுத்தந்தவர்.கடற்புலிகளின் அரசியல்துறையினரின் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழர் வரலாற்று பாரம்பரிய மேடை நாடகங்கள்,கூத்துக்கள்,கரகாட்டங்களில் தானே பாத்திரமேற்று நடித்து போராடும் உணர்வை மக்களுக்குள் கொண்டுசெல்ல அயராது உழைத்தவர்.
சிறுவயதில் தந்தையை இழந்த சூசையண்ணையை
அண்ணனாக மட்டுமின்றி தந்தையுமாய் நின்று தாங்கி வளர்த்த தாயுமானவர்.
இறுதிப்போரில் தனது தம்பியான கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணை அவர்களின் இழப்பால் வெகுவாகவே பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு ஆறுதல் சொல்லமுடியா தொலைவில் நாங்களும் தவித்திருந்தோம்.
தனது தம்பியிடமிருந்து இறுதிப்போரின் இறுதிக் கணத்தில் இந்த அண்ணனைப்பற்றி ஏதேனுமொரு ஆறுதல் வார்த்தையை அனுப்பியிருப்பார் என்று ஏங்கி எதிர்பார்த்திருந்திருப்பார்.
போர் ஓய்ந்தபின்னும் போரின் வடுக்கள் மனிதர்களை விழுங்கிக்கொள்கிறது ஆனால் நினைவுகள் மட்டும் புத்துயிர் பெற்று எழுவதை எந்தப்போராலும் வெற்றிகொள்ள முடிவதில்லை.
இவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுடன் நாமும் எமது எமது கரங்களைப் பற்றிக்கொண்டு…
சிலம்பாட்டத்தின் ஆசானுக்கு தலைவணங்கி
கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி.
கடற்புலிகள் சார்பாக
புலவர்.
கண்ணீர் அஞ்சலி
~~~~~~~~~~~~
கலாபூசனம், கலைச்சுடர், கலைப்பரிதி, சிலம்புச்செல்வன்
#தில்லை_சிவலிங்கம் (தில்லையம்பலம் தவராசா)
இன்று(29.11.2018 வியாழக்கிழமை) இறைவனடி சேர்ந்துள்ளார்.
உடுக்கு கலை வித்தகர். வல்வை முத்துமாரியம்மன் திருவிழாக்காலங்களில் கிராமிய உடுக்கு பாடல்களும், கரகாட்டங்களின்போதும் இவரின் ஓங்கி ஒலித்த குரலுக்கு நிகர் இவரே. அந்த குரல் இன்றோடு நிறுத்திக்கொண்டுள்ளது.
அன்னார் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை அவர்களின் அண்ணனாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு, அன்னாரின் பிரிவால் துயருற்றிலுக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி