பயிற்சி நடவடிக்கைகளுக்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் இலங்கையைச் சென்றடைந்துள்ளன.மூன்று இந்திய கடற்படைக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளன. இரு தரப்பு கடற்படையின் கூட்டுறவின் அடிப்படையில் இந்த கப்பல்கள் கொழும்பிற்கு சென்றுள்ளன.ஐ.என்.எஸ் சுஜாதா, ஐ.என்.எஸ் தரங்கினி மற்றும் ஐ.சீ.ஜீ.எஸ் வருணா ஆகிய கடற்படை யுத்தக்; கப்பல்களே இவ்வாறு இலங்கை சென்றுள்ளன.
எதிர்வரும் 21ம் திகதி வரையில் குறித்த கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இரு தரப்பு பயிற்சி நடவடிக்கைகளும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.