ஒவ்வொரு நாளிலும் வரலாற்றின் ஏதோஒரு முக்கியத்துவம் நடைபெற்றுதான் இருக்கும்.
ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது.
இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு இருந்தால் தயவுசெய்து
எமது மின்னஞ்சலுக்கு அறியதாருங்கள்
ஒவ்வொருநாளும் என்ன நடந்தது என்று சொல்லும் பக்கம் இது.
இதில் ஏதாவது நிகழ்வு தவறுதலாக பதியாமல் விடுபட்டு இருந்தால் தயவுசெய்து
எமது மின்னஞ்சலுக்கு அறியதாருங்கள்

[தொகு] நிகழ்வுகள்
- 2005-தமிழீழவிடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை அரசியல்பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் நினைவுதினம்.2005ம்ஆண்டு இதே நாளில் லெப்.கேணல் கௌசல்யனும் 4 விடுதலைப்புலிஉறுப்பினர்களும்
வீரச்சாவடைந்ததினம். - கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன் தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.திடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம் தமிழ் மனித இழப்பு பாதிப்பு அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது
- 1238 – மங்கோலியர்கள் ரஷ்யாவின் விளாடிமிர் நகரைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
- 1807 – நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளின் மீது போலந்தில்தாக்குதலைத் தொடங்கினர்.
- 1812 – மிசூரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது.
- 1819 – ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் சிங்கப்பூரை வில்லியம் ஃபார்க்கூஹார் என்பவரிடம் ஒப்படைத்து விட்டு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டார்.
- 1845 – Royal Asiatic Society இன் இலங்கைக் கிளை ஆரம்பிக்கப்பட்டது.
- 1863 – நியூசிலாந்து, ஆக்லாந்து நகர்க் கரையில் ஓர்ஃபியஸ் என்ற கப்பல் மூழ்கியதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.
- 1904 – மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்ற இடத்தில் பரவிய தீயினால் 1,500 கட்டடங்கள் 30 மணி நேரத்தில் தீக்கிரையாகின.
- 1914 – சார்லி சாப்ளினின் முதல் திரைப்படம் Kid Auto Races at Venice வெளியானது.
- 1962 – கியூபாவுடனான ஏற்றுமதி, மற்றும் இறக்குமதி தடைகளை ஐக்கிய அமெரிக்கா கொண்டு வந்தாது.
- 1967 – அலபாமாவில் உணவகம் ஒன்றில் பரவிய தீயினால் 25 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 – தாஸ்மேனியாவில் இடம்பெற்ற காட்டுத்தீயினால் 62 பேர் கொல்லப்பட்டனர்.
- 1971 – சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது.
- 1974 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கிரனாடா விடுதலை பெற்றது.
- 1977 – சோவியத் ஒன்றியம் சோயுஸ் 24 விண்கலத்தை இரண்டு விண்வெளி வீரர்களுடன் விண்ணுக்கு ஏவியது.
- 1979 – புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது.
- 1986 – எயிட்டியில் 28 ஆண்டுகள் குடும்ப ஆட்சி நடத்திய அதிபர் ஜீன்-குளோட் டுவாலியர் கரிபியன்நாட்டிலிருந்து வெளியேறினார்.
- 1990 – சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு தனி ஆதிக்கத்தை கைவிட இணங்கியது.
- 1991 – எயிட்டியின் முதலாவது மாக்களாட்சித் தலைவராக ஜீன்-பேட்ரண்ட் ஆர்ட்டிஸ்டே பதவியேற்றார்.
- 1991 – ஐரிஷ் குடியரசு இராணுவம் லண்டனில் 10 டவுனிங் வீதியில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போது அங்கு குண்டுத் தாக்குதலை நடத்தியது.
- 1992 – ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
- 1999 – உலகத்தமிழிணைய மாநாடு சென்னையில் ஆரம்பமானது.
பிறப்புகள்
- 1812 – சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஆங்கில நாவலாசிரியர் (இ. 1870)
- 1902 – தேவநேயப் பாவாணர், தமிழறிஞர் (இ. 1981)
- 1905 – ஊல்ஃப் வொன் இயூலர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1983)
- 1965 – கிரிஸ் ராக், அமெரிக்க மேடைச் சிரிப்புரையாளர், நடிகர்
- 1974 – ஸ்டீவ் நேஷ், கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
- 1919 – ஹென்றி யூலன், யாழ்ப்பாண ஆயர்.
- 1937 – எலிஹூ ரூட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)