Search

வல்வை தீருவில் உதை-நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

வல்வை தீருவில் உதை-நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது.

வல்வை தீருவில் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வல்வைக்குட்பட்ட கழகங்களுடையிலான அணிக்கு 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதியாட்டம் இன்றைய தினம் தீருவில் வி.க மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் நேதாஜி எதிர் சைனிங்ஸ் அணிகள் மோதின. நேதாஜி வி.கழகம் 02 : 01 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இரண்டாம் இடத்தைப்பெற்ற சைனிங்ஸ் அணி

இறுதி போட்டியின் ஆட்டநாயகனாக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ஞா.ரசிகரன் தெரிவுசெய்யப்பட்டார்.

இச்சுற்றுப்போட்டியின் தொடராட்டநாயகனாக சைனிங்ஸ் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த பிரசாந் தெரிவுசெய்யப்பட்டார்.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த பின்கள வீரனாக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த சி.தர்சன் தெரிவுசெய்யப்பட்டார்.

இச்சுற்றுப்போட்டியின் சிறந்த கோல்காப்பாளராக நேதாஜி விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த ஜெ.பிரகதீஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டார்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *