வல்வை விளையாட்டு கழகத்தின் வைரவிழாவை (1961-2021) முன்னிட்டு மறைந்த கழக வீரர்கள் ஞாபகர்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று உத்தியோக பூர்வமாக வல்வை விளையாட்டுக்கழக தலைவர் திரு.பா.பிரதீபன் தலைமையில் ஆரம்பமாகியது.
இன்றைய நாளின் முதலாவது போட்டியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து கலட்டி விளையாட்டுக்கழகம் மோத இருந்த வேளை கலட்டி வி.கழகம் வருகை தராமையினால்
வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக வெற்றி பெற்றது.இதனை தொடர்ந்து
காட்சிப்போட்டியாக வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகமும் வல்வை
விளையாட்டுக்கழகமும் மோதியது.