வல்வை நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் தேவையுடையோருக்கான உலர் உணவுகளுக்கான 33 பொதிகளை 2500ரூபா பெறுமதியில் வல்வையிலும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களில் வழங்கியுள்ளது.
சீனா நாட்டிலே வூகான் மாநகரிலே ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால்.படிப்படியாக உலக நாடுகளிலும் பரவியது.பரவியதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டங்களும் அமல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக தொழில்களை இழந்து அல்லலுறும் தொழிலாளர்களுக்கும் மாற்று வலுவுடையோருக்கும்.மாற்று வலுவுடைய முன்னாள் போராளிகளுக்கும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பத்தினருக்கும் இதுவரை அமைப்புகளால் வழங்கப்படாதோருக்குமாக முதற்கட்டமாக வல்வை பிரான்ஸ் வாழ் மக்களின் நிதி உதவியோடு 33 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் வல்வை பிரான்ஸ் நலன்புரிச்சங்கம் ஆனது (1)கல்வித்திட்டம் 1.தனிநபர் கல்வி திட்டம் 2ஆரம்ப பாடசாலை கல்வி திட்டம் 3.உயர்தர பாடசாலை கல்வி திட்டம்
(2)வாழ்வாதார திட்டம் எமது இணையத்தின் பொறுப்பினர் அவர்களிடம் இருந்தும் தரவுகளைப் பெற்று நேரடியாகவும் அவரின் ஊடாகவும் இச்செயல் திட்டங்களை நிறைவேற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.