வல்வெட்டித்துறை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதை யாத்திரை இன்று மதியம் ஆரம்பமாகியுள்ளது.
கதிர்காமம் ஆனது இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.
வல்வெட்டித்துறை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து 400 தொடக்கம் 420 கிலோமீட்டர் நீளப் பாதையை காடு, வயல் வெளி, குளம், நீரேரி, கால்வாய், இவையெல்லாம் கடந்து கதிர்காம கந்தனை தரிசித்து அருளைபெற எம்பெருமானின் மெய்யடியார்கள் பாதை யாத்திரை பவனி செய்கின்றார்.
இவர்கள் கிட்டதட்ட 18-20 நாட்கள் நடை பயணத்தை மேற்கொள்கின்றார்கள்.