வல்வை செய்திகள்

இன்று இரவு ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் புரெவி சூறாவளி திருகோணமலைக்கும் பருத்தித்துரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தரை தொட்டு முல்லைத்தீவு ஊடாக மன்னர் வரைவில் செல்லும் என்று எதிர்பார்க்கப் கூறப்படுகின்றது.

புரெவி சூறாவளி அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கரையோரங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

 

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண ஆளுநர்கள் அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபருக்கும் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

அதேநேரம் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நிதியை ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று இரவு ஏழு மணிக்கும் பத்து மணிக்கும் இடையில் புரெவி சூறாவளி திருகோணமலைக்கும் பருத்தித்துரைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் தரை தொட்டு முல்லைத்தீவு ஊடாக மன்னர் வரைவில் செல்லும் என்று எதிர்பார்க்கப் கூறப்படுகின்றது.

இந்த சூறாவளி ல தனக்கான பாதையை மாற்றி மாற்றி அமைப்பதால் மக்கள் எந்த நேரமும் கவனத்துடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இடர் தாங்கும் முகாமாக உடுப்பிட்டி பாடசாலை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிரமா சேவையாளர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *