11-04-2009 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் அன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்தார்கள்.

11-04-2009 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் அன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்தார்கள்.

2009 இனவாத அரசின் தமிழர் இன அழிப்பு தொடர்….!

11-04-2009 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைக்கும் மத்தியில் அன்றும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் படுகாயமடைந்தார்கள்.

‘மக்கள் பாதுகாப்பு வலய’ பகுதிகளான மாத்தளன் மற்றும் அம்பலவன்பொக்கணை ஆகிய பகுதிகள் மீது அன்று சனிக்கிழமை காலை தொடக்கம் இரவு வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, மோட்டார் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினார்கள் இதில் 32 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்தார்கள்

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக கொல்லப்பட்டவர்களை புதைக்க முடியாமலும், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பெயர், விபரம் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை

இதே நாள் வன்னியில் வேவ்வேறு இடங்களிலும் இராணுவத்தின் தாக்குதல்களில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அவர்களின் விபரங்கள் கிடைக்கவில்லை .

பதிவு – முள்ளிவாய்க்களும் முற்றத்து மண்ணும் நூலில் இருந்து.

படம்- த. வி.பு. ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published.