டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு
130 கோடி இந்தியர்களின் கனவை மெய்பித்த தங்க மகன் இன்னும் பலர் புகழ்ந்து பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் வருக்கின்றார்கள்.
இதில் நேற்று ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட, நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தி தகுதி சுற்றில் 86.65 மீற்றர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அதைத் தொடர்ந்து அதற்கான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது, இதில், தொடக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்த நீராஜ் சோப்ரா முதலிடத்தில் இருந்தார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை பெற்றார்.
இவரைத் தொடர்ந்து ஜேர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் நீரஜை பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தியுள்ளார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. மட்டுமின்றி மொத்த பதக்க எண்ணிக்கை 7 என உயர்ந்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு
130 கோடி இந்தியர்களின் கனவை மெய்பித்த தங்க மகன் இன்னும் பலர் புகழ்ந்து பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் வருக்கின்றார்கள்.