பருத்தித்துறை நீதிமன்ற வாயில் காவல் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரினால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்தே முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டார் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி!
உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன் சுலக்ஸன் அவர்களுக்கு இன்று துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்.
பருத்தித்துறை பொலிஸ் திலையத்திற்குள் வைத்து, துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான முறைப்பாட்டை ஏற்க மறுத்த பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலையீட்டை அடுத்தே முறைப்பாட்டை ஏற்றுக் கொண்டார் பருத்தித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி!
பொலிஸ் நிலையத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள CCTV பதிவை பரிசோதிக்குமாறும், ஊடகவியலாளரால் மனித உரிமைகள் ஆணைக்கிழுவின் பிராந்திய இணைப்பாளர் T.கனகராஜ் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.