Search

தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் T-20 போட்டியில் செந்தோமஸ் அணியை வெற்றி பெற்றது வல்வை அணி

தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் T-20 போட்டியில் செந்தோமஸ் அணியை வெற்றி பெற்றது வல்வை அணி

தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மாபெரும் T-20 சுற்றுப்போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகமானது தனது முதலாவது போட்டியில் செந்தோமஸ் விளையாட்டுக்கழகத்தினை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (15/05/2022) எதிர்கொண்டது..
அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய வல்வை விளையாட்டுக்கழகமானது 17.5 பந்துபரிமாற்றம் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.. வல்வை அணிசார்பாக பிரகதீஸ்வரன் அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்….
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய செந்தோமஸ் அணியானது 16 பந்துபரிமாற்றம் நிறைவில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.. வல்வை அணிசார்பாக பந்துவீச்சில் ரஞ்சித் அதிகபட்சமாக 4 இலக்குகளை கைப்பற்றினார்..

வல்வை அணி 25 ஓட்டங்களால் வெற்றி

போட்டியின் ஆட்டநாயகனாக அதிரடியாக 38 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பிரகதீஸ்வரன் தெரிவு செய்யப்பட்டார்.