13 ஒழிப்புக்கு படை திரட்டல் – ஹல உறுமயவின் ஏற்பாட்டில் வியாழனன்று முக்கிய சந்திப்பு

13 ஒழிப்புக்கு படை திரட்டல் – ஹல உறுமயவின் ஏற்பாட்டில் வியாழனன்று முக்கிய சந்திப்பு
13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக நாளைமறுதினம் வியாழக்கிழமை கொழும்பில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.  ஜாதிக ஹெல உறுமயவுக்கும்இ கடும்போக்குடைய சிங்களத் தேசிய அமைப்புகளுக்குமிடையில் இந்த முக்கிய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுபலசேனாஇ சிஹல ராவயஇ தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்இ சிங்கள தேசிய சங்கம்இ தர்ம விஜய நிதியமஇ ராவண பலய உள்ளிட்ட சகல சிங்கள பௌத்த அமைப்புகளும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளன.  இச்சந்திப்பின்போது அரசமைப்பிலிருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழிக்கக்கோரும் ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணைஇ வடக்குத் தேர்தல்இ மிருகவதைத் தடைச் சட்டவரைவுஇ வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் உட்பட முக்கிய பல விடயங்கள் சம்பந்தமாக ஆராயப்படும் என அறியமுடிகின்றது.
அதேவேளைஇ சிங்களஇ பௌத்த அமைப்புகளிடம் மேற்படி விடயங்கள் சம்பந்தமாகக் கருத்துக் கேட்டபின்னர் அவற்றை அறிக்கை யொன்றாகத் தயாரித்து ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஹெல உறுமய உத்தேசித்துள்ளது என்றும் தெரியவருகின்றது.
குறிப்பாகஇ தமது கோரிக்கையை ஏற்காது அரசு வடமாகாண சபைத் தேர்தலுக்கு செல்லுமானால்இ அவ்வேளையில் தாம் எடுக்கவுள்ள முடிவு தொடர்பிலும் பௌத்த அமைப்புகளுக்கு இச்சந்திப்பின்போது ஹெல உறுமய உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன்இ அரசமைப்பிலிருந்து 13ஐ அகற்றுமாறு அரசுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்குமாறு மேற்படி அமைப்புகளிடம் ஹெல உறுமய கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published.