வல்வை நலன்புரிச் சங்கத்தினரின்(ஐ.இ) அன்னபூரணியின் பவளவிழாவும்,கோடைவிழா தொடர்பான பொதுக்கூட்டம்
அன்பார்ந்த பிரித்தானியா வாழ் வல்வை மக்களே எங்கள் பெருமையை உலகறியச் செய்ய ஒன்றினைவோம்.
ஆண்டுதோறும் வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் நடாத்தப்படும் கோடைவிழா , இவ் ஆண்டு அன்னபூரணியின் பவளவிழாவாக கொண்டாட இருப்பது வல்வை மக்கள் அனைவருக்கும் தெரிந்த விடயமே, எமது இவ் விழாவானது இலண்டன் மட்டுமின்றி வல்வையர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் அன்னபூரணியின் வரலாற்றுச் சிறப்பை மீண்டும் உலகத்தமிழர்களுக்கு பெருமையுடன் தெரியப்படுத்தும் நாளாக இக் கோடைவிழா அமைவதனால்,
சென்ற ஆண்டை விட இவ் ஆண்டு விழா தொடர்பான செயற்பாடுகள் நிறையவே இருப்பதனால் ஒவ்வொரு ஆண்டும் எம் விழா தொடர்பான பொதுக்கூட்டத்தில், நாம் விழா சிறப்பாக அமைய எமது கருத்துகளை பகிர்ந்து, செயற்பாடுகளையும் பொறுப்பேற்று செயற்படுத்துவது போல் இவ் ஆண்டும் ஒன்றினைவோம்
பொதுக்கூட்டம் , காலம் : 08.06.2013 சனிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணிக்கு
இடம் : Kingswood Business Centre , 31-39 Miles Road , Mitcham ,Surrey , CR4 3DA
உதயணன் : 07578 086782 வசி : 07961 426012