இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்குமாறு ஜெனீவாவுக்கான அமெரிக்கத் தூதுவர் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
விடேசமாக, இலங்கையில் ஊடக சுதந்திரம் தொடர்பில் ஆராய்வதற்காகவே ஐ.நாவின் விசேட குழு வரவிருந்த நிலையிலேயே அமெரிக்கத் தூதுவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.
