30 இலங்கையர்களுடன் ஆஸி சென்ற படகைக் காணவில்லை!

30 இலங்கையர்களுடன் ஆஸி சென்ற படகைக் காணவில்லை!

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவு கடற்பரப்பில் படகு ஒன்று காணாமல் போயுள்ளதாகவும் இந்தப் படகில் 30 இலங்கையர்களும் பயணித்தனர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தஞ்சக் கோரிக்கையாளர்களுடன் ஆஸி நோக்கிச் சென்று கொண்டிருந்த படகே கடந்த திங்களன்று கொக்கஸ் தீவுகளுக்கு அருகில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, படகு ஒன்று காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளமையை ஆஸியின் கரையோரப் பாதுகாப்பு அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

படகு காணாமல் போயுளள்ள கடற்பிரதேசத்துக்குக் கடற்படை படகுகளும் ஹெலிக்கப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இடம்பெற்ற இரண்டாவது விபத்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.