1927 ஆம் வருடம் வல்வெட்டித்துறையில் செய்யப்பட்டு, வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவின் Gloucester துறைமுகத்தை 02 Aug 13 அன்று சென்றடைந்திருந்த, Florence C Robinson எனும் பாய்மரக் கப்பலான அன்னபூரணியை, அப்படியே ஒத்த மாதிரிக் கப்பலை (Model ship) வடிவமைப்பதற்கு
தற்பொழுது வல்வையில் உள்ள, கப்பல் கட்டும் தொழிலுடன் தொடர்புடைய அனேகமாக அனைத்து மேஸ்திரியார்களும் பங்குகொள்ளவுள்ளார்கள்.
அன்னபூரணி மாதிரிக் கப்பலை (Model ship) வடிவமைக்கும் ஆரம்ப நிகழ்வு, கடந்த 15 June 13 அன்று வல்வெட்டித்துறையில் பூச்சி குத்தானில் நடைபெற்றது.
இவ் மாதிரிக் கப்பலை, இதன் உருவாக்கத்தின் பின்னர், ஒரு சிறு விழாவினூடாக வல்வெட்டித்துறை சந்தியில் உள்ள வல்வை பொது சன சமூக சேவா நிலையத்தில் நிரந்தரமாக காட்சிப்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டிருக்கின்றது.