ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகை மீது தாக்குதல்
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காபூலில் அமைந்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் நிலை கொண்டிருந்த படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறி;த்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவாத்தை நடத்த முன்வைத்த யோசனையை ஜனாதிபதி கார்சாய் எதிர்த்து சில நாட்களின் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.