04.08.2013 அன்று டென்மார்க் Vidbjerg cup 2013 ன் 13 மற்றும் 15
வயதிற்குட்பட்டோரின் அறையிருதில் விளையாடிய தமிழீழீ அணிகள்
இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. அதனைத்தொடர்ந்து மதியம் 11:30 மணிக்கு
இறுதிப்போட்டியில் Germanyயுடன் விளையாடிய 13 வயதிற்குட்பட்டோரின்
தமிழீழீ அணி 1 : 5 என்ற கணக்குடனும் Norwayயுடன் விளையாடிய 15
வயதிற்குட்பட்டோரின் தமிழீழீ அணி 2 : 3 என்ற கணக்குடனும்
வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது.
அதனைத்தொடர்ந்து மாலை 15:00 மணிக்கு வீரர்களுக்கும் வீரர்களின்
பெற்றோர்களுக்குமான ஒன்றுகூடல் நடைபெற்றது. இவ் ஒன்றுகூடலில் வீரர்கள்
கௌரவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைவரினதும் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
மாலை 17:00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல்
ஒலிக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்தை உரக்கச் சொல்லி நிகழ்ச்சி
நிறைவுற்றது.
15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 : 1 Aabyhøj IF (Danmark)
காலை 09:45 மணிக்கு Aabyhøj IF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த
அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Aabyhøj IF அணி 1 இலக்கையும் தமிழீழ
அணி 2 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு
தகுதி பெற்றனர்.
வைஸ்ணவன் சற்குணநாதன் 1 இலக்கையும், சங்கீத் சத்தியமூர்த்தி 1
இலக்கையும், எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்
13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 3 Ranum-Overlade IK Vest (Danmark)
காலை 09:45 மணிக்கு Ranum-Overlade IK Vest அணிக்கும் தமிழீழ அணிக்கும்
நடந்த அறையிருதி உதை பந்தாட்ட போட்டியில் Ranum-Overlade IK Vest 3
இலக்குகளையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில்
புள்ளிகளின் அடிப்படையில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
சாரங்கன் சிவநாதன் 1 இலக்கையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும், அபிநயன்
ராஜசிங்கம் 1 இலக்கையும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 Bogafjell IL (Norway)
மதியம் 11:30 மணிக்கு Bogafjell IL அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த
இறுதி உதை பந்தாட்ட போட்டியில் Bogafjell IL அணி 2 இலக்குகளையும் தமிழீழ
அணி 3 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்று கிண்ணத்தை
தனதாக்கினர்.
வைஸ்ணவன் சற்குணநாதன் 2 இலக்குகளையும், கிரிஸ்சாந்தன் 1 இலக்கையும்
எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்
13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 3 : 2 SV Borussia Moehnsen (Germany)
மதியம் 11:30 மணிக்கு SV Borussia Moehnsen அணிக்கும் தமிழீழ அணிக்கும்
நடந்த இறுதி உதை பந்தாட்ட போட்டியில் SV Borussia Moehnsen 1
இலக்குகளையும் தமிழீழ அணி 5 இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில்
வென்று கிண்ணத்தை தனதாக்கினர்.
சாரங்கன் சிவநாதன் 3 இலக்குகளையும், அபிநயன் ராஜசிங்கம் 1 இலக்கையும்
எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.