ஈரானின் பேச்சில் மயங்கி விடாமல் அமெரிக்கா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய ஜனாதிபதியாக ரவுஹானி பதவி ஏற்ற பின்பு, தனது ஆட்சி காலத்தில் அணு ஆயுதம் தயாரிக்கப்பட மாட்டாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ரவுஹானி, ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
அப்போது, இருநாடுகளுக்கு இடையேயான துண்டிக்கப்பட்ட உறவுகளை மீண்டும் தொடர விரும்புவதாகவும் உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து ஈரானின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விமான நிலையத்திற்கு வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இனிக்க இனிக்க பேசிக்கொண்டு, சிரித்துக் கொண்டே கழுத்தை அறுக்கும் ஈரானின் பேச்சில் அமெரிக்கா மயங்கி விழக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.