வடக்கு – கிழக்கு இணையவே முடியாது – அரசு திட்டவட்டம்!

வடக்கு – கிழக்கு இணையவே முடியாது – அரசு திட்டவட்டம்!

வடக்கு மாகா­ணமும் கிழக்கு மாகாணமும் விவா­க­ரத்துப் பெற்­று ­விட்­டன. எனவே, மீண்டும் வடக் கும் கிழக்கும் இணை­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இல்லை. காணி அதி­கா ­ரங் கள் குறித்த பிரச்­சி­னைக்கும் உயர் ­நீ­தி­மன்றம் தீர்ப்­ப­ளித்­து­விட்­டது என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் செய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான சுசில் பிரேம்­ஜ­யந்த தெரி­வி த்தார். வடக்கு மாகாண சபையில் கூட்­ட­மைப்புடன் சக­வாழ்­வுடன் செயற்­ப­டு­வ­தற்­கான அவ­சி­யத்தை ஆளும் கட்சி உணர்ந்­துள்­ளது.மக்­களின் இது தொடர்­பான தீர்ப்பை ஏற்­றுக்­கொள்­கின்றோம். அதே­வேளை கூட்­ட­மைப்பும் எம்­முடன் இணைந்து செயற்­படும் என்று நம்­பு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது

வட மாகாண சபையில் முன்னாள் நீதி­ய­ரசர் விக்கி­னேஸ்­வரன் முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். வடக்கு மக்­களின் சட்ட ரீதி­யான தீர்ப்­புக்கு நாங்கள் தலை வணங்­கு­கின்றோம். மக்­களின் தீர்ப்பை நாங்கள் ஏற்­கின்றோம்.

அந்­த­வ­கையில் வடக்கு மாகாண சபையில் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­துடன் சக­வாழ்­வுடன் செயற்­ப­டு­வ­தற்­கான அவ­சி­யத்தை ஆளும் கட்சி உணர்ந்­துள்­ளது. மக்­களின் இது தொடர்­பான தீர்ப்பை ஏற்­றுக்­கொள்­கின்றோம். அதே­வேளை கூட்­ட­மைப்பும் எம்­முடன் இணைந்து செயற்­படும் என்று நம்­பு­கின்றோம். மக்­களின் தீர்ப்பை ஏற்று செயற்­ப­டுவோம்.

ஆரோக்­கி­ய­மாக இருக்கும்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வடக்கில் ஆரோக்­கி­ய­மான முறையில் செயற்­பட்டு அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைப்­புடன் பய­ணிக்கும் என்­பதே எமது நோக்­க­மாகும். வடக்கில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களில் எவ்­வி­த­மான குறைவும் ஏற்­ப­டாது. அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் ஒத்­து­ழைப்­புடன் செயற்­ப­டுவோம்.

இதே­வேளை வட மாகா­ணத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் ஏழு உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். கூட்­ட­மைப்பின் பத­வி­யேற்பின் பின்னர் எமது கூட்­ட­மைப்பின் உறுப்­பி­னர்கள் சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­து­கொள்­வார்கள். கூட்­ட­மைப்­பினர் அடுத்த வாரம் பதவிப் பிர­மாணம் செய்­து­கொள்­வார்கள். வடக்கில் அனைத்து இன மக்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் அர­சாங்­கமே பிர­தி­நி­தி­களை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

அதி­கா­ரங்கள் பிரச்­சி­னை­யல்ல

இதே­வேளை 13 ஆம் திருத்தச் சட்­டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்கள் குறித்து பெரி­தாக அலட்­டிக்­கொள்­ள­வேண்­டி­ய­தில்லை. காணி அதி­கா­ரங்கள் மத்­திய அர­சாங்­கத்­துக்கு சொந்­த­மா­னது என்று உயர்­நீ­தி­மன்றம் தீர்ப்பு வழங்­கி­விட்­டது.

பொலிஸ் அதி­காரம் குறித்து பேசும்­போது நாட்டில் தேசிய பொலிஸ் ஆணைக்­குழு மட்­டுமே இருக்க முடியும் என்று அர­சி­ய­ல­மைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் கூறு­கின்­றது. எனவே அது குறித்தும் பாரிய பிரச்­சி­னைகள் இல்லை.

இரண்டு ஆளு­நர்கள்

இத­னி­டையே வடக்கு கிழக்கு பிரிப்புத் தொடர்பில் நீண்­ட­கா­லத்­துக்கு முன்னர் வழங்­கப்­பட்ட நீதி­மன்றத் தீர்ப்பு உள்­ளது. அதா­வது கடந்த காலத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்­கப்­பட்­டி­ருந்­தமை சட்­ட­வி­ரோ­த­மா­னது என்று தீர்ப்பு கூறு­கின்­றது. அந்த வகையில் வடக்கும் கிழக்கும் பிரிக்­கப்­பட்­ட­துடன் தற்­போது நீண்­ட­கா­ல­மாக இரண்டு ஆளு­நர்கள் இரண்டு மாகா­ணங்­க­ளிலும் செயற்­ப­டு­கின்­றனர். கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு முறை தேர்­தல்­க­ளையும் நடத்­தி­விட்டோம்.

வடக்கு மாகா­ணமும் கிழக்கு மாகா­ணமும் விவா­க­ரத்துப் பெற்­று­விட்­டன. எனவே மீண்டும் வடக்கும் கிழக்கும் இணை­வ­தற்­கான சாத்­தி­யங்கள் இல்லை. அத்­துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்­பான ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் நிலைப்­பாடும் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டு­விட்­டது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன

அமைச்சர் மைத்­தி­ரி­பால சிறி­சேன செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்து வெளி­யி­டு­கையில்,

வடக்குத் தேர்­தலை நடத்­தக்­கி­டைத்­தமை தொடர்பில் எமது அர­சாங்கம் மகிழ்ச்­சி­ய­டை­கின்­றது. வடக்கில் ஜன­நா­ய­கத்தை நாங்கள் உறு­தி­ப­டுத்­தி­யுள்ளோம். இது­வரை எந்த அர­சாங்­கமும் செய்­யா­ததை எமது அர­சா­ங்கம் செய்­துள்­ளது. வடக்கு மக்­களின் ஜன­நா­யக உரிமை மனித உரிமை மற்றும் அடிப்­படை உரிமை என்­ப­ன­வற்றை எமது அர­சாங்­கமே உறு­தி­ப­டுத்­திக்­கொ­டுத்­துள்­ளது. வடக்கில் புதிய மாகாண சபையை உரு­வாக்­கி­யுள்ளோம்.

வடக்கில் வெற்­றி­பெ­ற­வேண்டும் என்ற தேவை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணிக்கு இருக்­க­வில்லை. மாறாக அந்த மக்­களின் ஜன­நா­யக உரி­மையை உறு­தி­ப­டுத்­து­வதே எமது தேவை­யா­க­வுள்­ளது. வடக்குத் தேர்தல் நடந்து முடிந்­ததும் ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் மக்­களின் வாக்களிப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டதுடன் நன்றியும் தெரிவித்தார்.

அத்துடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வடக்கு மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தமை தொடர்பில் பாராட்டியிருந்தது. இது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை நாங்கள் செய்துள்ளோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகங்கள் வடக்குத் தேர்தலை பாராட்டியுள்ளன. எனவே அந்த வகையில் எமது நோக்கம் நிறைவேறியுள்ளது. வடக்கில் ஜனநா யகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.