இலங்கை விடயத்தில் தோல்வி கண்டது ஐ.நா; பிரதி செயலாளர் நாயகம் ஒப்புதல்!

இலங்கை விடயத்தில் தோல்வி கண்டது ஐ.நா; பிரதி செயலாளர் நாயகம் ஒப்புதல்!

இலங்­கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் இடம்­பெற்­றி­ருந்த இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது தன்னால் ஆற்­றப்­பட வேண்­டி­யி­ருந்த தார்­மீகக் கட­மை­களை நிறை­வேற்­று­வதில் ஐ.நா. தோல்வி கண்டிருப்பது குறித்து ஐ.நா.வின் உய­ர­தி­காரி ஒருவர் வாய் திறந்­துள்ளார். நியூ­யோர்க்கில் அமைந்­துள்ள ஐ.நா தலைமை அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றுள்ள வெளியுறவுகள் குறித்த பேரவைக் கூட்­டத்தில் ஐ.நா. பிரதி செய­லாளர் நாயகம் ஜான் எலி­யசன் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்­கையில் இடம்­பெற்­றி­ருந்த இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது ஐ.நா. செயற்­பட்ட விதம் குறித்து ஆரா­ய­வென மேற்­கொள்­ளப்­பட்ட உள்­ளக மீளாய்வு ஒன்றில் ஐ.நா. உறுப்பு நாடு­களின் பல்­வே­று­பட்ட அங்­கங்கள் தத்­த­மக்­கென தாமா­கவே வரித்துக் கொண்­டி­ருந்த கற்க வேண்­டிய பாடங்­களைக் கற்­பதில் முறை­யான தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தமை குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் விப­ரிக்­கையில், இலங்­கையில் நடை­பெற்­றி­ருந்த யுத்­தத்தின் கொடூ­ர­மான இறுதிக் கட்­ட­மா­னது ஐ.நா.வின் பரந்­த­ள­வி­லான பிர­சன்­ன­மொன்­றுக்­கான பாரிய அழுத்­தத்தை கொடுத்­தி­ருந்த வேளையில் ஐ.நா. முறை­யையோ அதற்கு இசை­வாக சரி­யான முறையில் செயற்­பட்­டி­ருக்­க­வே­யில்லை. இதி­லி­ருந்து நாம­னை­வரும் கற்­றுக்­கொள்ள வேண்­டிய பிர­தான பாட­மொன்று என்­ன­வெனில் அர­சியல், மனித உரி­மைகள் சார்ந்த நிபு­ணத்­து­வத்­தையும் வளங்­க­ளையும் அவை தேவைப்­படும் இடத்தில் ஐ.நா. முறைமை பயன்­ப­டுத்தி வரு­வ­தனை உறு­திப்­ப­டுத்­து­வ­தே­யாகும்.

இதற்கு இணை­யாக முக்­கி­யத்­துவம் பெற்­றுள்­ள­தாக விளங்­கு­வது யாதெனில், எங்­கெங்­கெல்லாம் மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் இடம்­பெ­று­கின்­ற­னவோ அத்­த­கைய அபாய அறி­விப்­புக்கள் குறித்து நாம் விரைந்து செயற்­ப­டு­வ­துடன் அங்கு நாம் காண்­பவை பற்றி தைரி­ய­மாக ஒளிவு மறை­வின்றி உல­குக்குக் கூறியே ஆக வேண்டும். ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் சார்­பி­லேயே நான் இந்த உள்­ளக ஆழ்ந்த ஆராய்­வினை தலை­மை­யேற்று மேற்­கொண்­டுள்ளேன் என தெரி­வித்தார்.

இலங்­கையில் நடந்து முடிந்த யுத்த காலத்தின் போது அதனைக் கண்­கா­ணிக்­கவும் அங்கு கண்­ட­றி­யப்­பட்­ட­வற்றை ஐ.நா. பாது­காப்புச் சபைக்கு தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்­கு­மான போதிய வளங்­க­ளெ­த­னையும் இலங்­கையில் உள்ள ஐ.நா. காரி­யா­லயம் கொண்­டி­ருக்­க­வே­யில்­லை­யெ­னவும் எலி­யசன் குறை கூறினார்.

இலங்­கையில் இடம்­பெற்­றி­ருந்த இறு­திக்­கட்ட யுத்­த­கா­லத்தின் போது ஐ.நா. தனது தார்­மீகக் கட­மை­களை நிறை­வேற்­று­வதில் தோல்வி கண்­டி­ருந்­த­தனை அண்­மையில் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் ஒப்­புக்­கொண்­டி­ருந்­தமை தெரிந்ததே.

Leave a Reply

Your email address will not be published.